பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:24
கோயம்புத்துார் : டில்லியைச் சேர்ந்த, ‘கோமியோ’ நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள், கோவையில், மொபைல் போன் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு பொது மேலாளர், சுஜித் ராயிராத் கூறியதாவது: ஹாங்காங்கைச் சேர்ந்த, ‘டப்வைஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, கோமியோ, 2017 ஆகஸ்டில், மொபைல் போன் விற்பனையை துவக்கியது. நடப்பு நிதியாண்டில், 30 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், தென் மாநிலங்களில், 25 ஆயிரம் மொபைல் போன்களை விற்பனை செய்தோம். அதில், தமிழகத்தில் விற்கப்பட்ட, 10 ஆயிரம் மொபைல் போன்களும் அடங்கும். தமிழகத்தில், கோவையில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன் தொழிற்சாலையை இந்தாண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, இரண்டு புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நிறுவனம், 4,000 – 12 ஆயிரம் ரூபாய் விலையில் உள்ள மொபைல் போன் சந்தையை குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|