பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:26
சென்னை : ‘‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் வருவாய், 47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது,’’ என, தலைமை நிதி அதிகாரி, கோபால் மகாதேவன் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: வாகன உற்பத்தி துறையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 84 சதவீதம் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் வருவாய், 47 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 4,258 கோடி ரூபாயாக இருந்த வருவாய், நடப்பு முதல் ஆண்டில், 6,250 கோடியாக உயர்ந்து உள்ளது.
அசோக் லேலண்டு நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 24 சதவீதம் உயர்ந்துள்ளது. அனைத்து கனரக வணிக வாகனங்களின் எண்ணிக்கை, 54 சதவீதமாகவும், இலகு ரக வணிக வாகனங்கள் எண்ணிக்கை, 33 சதவீதமாகவும் உயர்ந்து, மொத்தமாக, 48 சதவீதம் உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது.
முதல் காலாண்டில், கனரக வாகனங்கள் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்ததே காரணம். அடுத்த மூன்று காலாண்டுகளிலும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கோபால் மகாதேவன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|