இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.69இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.69 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய வரலாறு படைத்த இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2018
10:42

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 26) அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் வங்கி, சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகளை அதிக அளவில் வாங்கியதாலும் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு கை கொடுத்தன. இதனால் சென்செக்ஸ் முதல் முறையாக 37,000 புள்ளிகளையும், நிப்டி 11,100 புள்ளிகளையும் கடந்துள்ளன. இதற்கு முன் நேற்று சென்செக்ஸ் எட்டிய 36,947.18 புள்ளிகளும், ஜனவரி 29 அன்று நிப்டி எட்டிய 11,171.55 புள்ளிகளுமே பங்குச்சந்தையின் உச்சபட்ச சாதனையாக கருதப்பட்டது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 26, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 156.42 புள்ளிகள் உயர்ந்து 37,014.65 புள்ளிகளாகவும், நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து 11,172.20 புள்ளிகளாகவும் இருந்தது. வங்கி, ஆட்டோ, உள்கட்டமைப்பு, ஆயுள் காப்பீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளின் பங்கு மதிப்பு பெருமளவு உயர்ந்ததே பங்குச்சந்தைகள் இந்த புதிய மைல்கைல்லை எட்டிப்பிடிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோடாக் வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.79 சதவீதம் உயர்வுடனும் , ஆசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, இன்போசிஸ் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் சரிவுடனும் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)