பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
10:42
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 26) அதிரடியாக உயர்ந்து வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் வங்கி, சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகளை அதிக அளவில் வாங்கியதாலும் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு கை கொடுத்தன. இதனால் சென்செக்ஸ் முதல் முறையாக 37,000 புள்ளிகளையும், நிப்டி 11,100 புள்ளிகளையும் கடந்துள்ளன. இதற்கு முன் நேற்று சென்செக்ஸ் எட்டிய 36,947.18 புள்ளிகளும், ஜனவரி 29 அன்று நிப்டி எட்டிய 11,171.55 புள்ளிகளுமே பங்குச்சந்தையின் உச்சபட்ச சாதனையாக கருதப்பட்டது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 26, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 156.42 புள்ளிகள் உயர்ந்து 37,014.65 புள்ளிகளாகவும், நிப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து 11,172.20 புள்ளிகளாகவும் இருந்தது. வங்கி, ஆட்டோ, உள்கட்டமைப்பு, ஆயுள் காப்பீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளின் பங்கு மதிப்பு பெருமளவு உயர்ந்ததே பங்குச்சந்தைகள் இந்த புதிய மைல்கைல்லை எட்டிப்பிடிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோடாக் வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.79 சதவீதம் உயர்வுடனும் , ஆசியன் பெயிண்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, இன்போசிஸ் நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|