இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.60இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.60 ... உணவு பதப்படுத்தும் துறையில் எப்.டி.ஐ., 24 சதவீதம் உயர்வு உணவு பதப்படுத்தும் துறையில் எப்.டி.ஐ., 24 சதவீதம் உயர்வு ...
அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: போராட்டம் வாபஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2018
23:34

நாகர்­கோ­வில் : குமரி மாவட்­டத்­தில், மிகப்­பெ­ரிய அர­சுத் துறை நிறு­வ­னங்­களில் ஒன்­றான, அரசு ரப்­பர் கழ­கத்­தில் பணி செய்­யும் தொழி­லா­ளர்­க­ளுக்­கான ஊதிய ஒப்­பந்­தம், 2016 நவம்­ப­ரில் நிறை­வ­டைந்தது. இதை­ய­டுத்து, மூன்­றாண்­டு­க­ளுக்­கான, புதிய ஊதிய ஒப்­பந்­தம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

புதிய ஊதிய ஒப்­பந்­தம் ஏற்­ப­டுத்­தும் வகை­யில், தொழிற்­சங்­கங்­கள், ரப்­பர் கழக நிர்­வா­கத்தை தொடர்ந்து வலி­றுத்தி வந்­தன. பல பேச்­சில் முடிவு ஏற்­ப­டாத நிலை­யில், தொழி­லா­ளர்­கள் பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை நடத்தி வந்­த­னர். இப்­போ­ராட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக தொழி­லா­ளர்­கள், 4ம் தேதி முதல் ஒத்­து­ழை­யாமை போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், நாகர்­கோ­வி­லில் தொழி­லா­ளர் துறை துணை கமி­ஷ­னர் அலு­வ­ல­கத்­தில், 34வது முறை­யாக நேற்று பேச்சு நடந்­தது. இதில், தொழி­லா­ளர் துறை துணை கமி­ஷ­னர் சுடலைராஜ், ரப்­பர் கழக நிர்­வாக இயக்­கு­னர் வேணு பிர­சாத் மற்­றும் தொழிற்­சங்க நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர். இதில், ரப்­பர் கழ­கத்­தில் பணி­பு­ரி­யும், பால்­வ­டிப்பு தொழி­லா­ளர்­கள், ஆலைத் தொழி­லா­ளர்­கள், களப்­பணி தொழி­லா­ளர்­கள் உள்­ளிட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு, இடைக்­கால ஊதிய உயர்­வாக நாள் ஒன்­றிற்கு, 23 ரூபாய் உயர்த்தி வழங்க ரப்­பர் கழ­கம் ஒப்பு கொண்­டது.

இந்த ஊதிய தொகை­யு­டன், அக­வி­லைப்­ப­டி­யும் கூடு­த­லா­கக் கிடைக்­கும். இதை­ய­டுத்து, புதிய ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­னது. தொழி­லா­ளர்­கள் நடத்தி வந்த ஒத்­து­ழை­யாமை போராட்­டம், இன்று முதல் விலக்கி கொள்­ளப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)