தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு ... மஞ்­சள் வரத்து சரிவு; விலை­யும் குறைந்­தது மஞ்­சள் வரத்து சரிவு; விலை­யும் குறைந்­தது ...
நுால் வரத்து குறைவு: இலவச வேட்டி – சேலை உற்பத்தி பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
23:15

ஈரோடு : நுால் விலை உயர்ந்து, அரசு சார்­பில் நுால் வழங்­கு­தல் குறைந்­த­தால், அர­சின் இல­வச வேட்டி, சேலை உற்­பத்தி பணி­யில் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் ஏழை, எளி­யோ­ருக்கு பொங்­கல் பண்­டி­கை­யின்­போது வழங்­கு­வ­தற்­கான இல­வச வேட்டி, சேலை உற்­பத்­திக்­காக, அரசு, 520 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­து உள்­ளது. மொத்­தம், 1.50 கோடி வேட்டி, 1.50 கோடி சேலை உற்­பத்தி செய்ய, இலக்கு நிர்­ண­யித்­து உள்­ளது.

நுால் விலை :
ஈரோடு, நாமக்­கல், கோவை, திருப்­பூர், திரு­நெல்­வேலி, விரு­து­ந­கர் போன்ற மாவட்­டங்­களில் உள்ள விசைத்­தறி மற்­றும் கைத்­தறி நெசவு மூலம், இப்­பணி நடந்து வரு­கிறது. கைத்­தறி துறை மூலம், நெச­வா­ளர் கூட்­டு­றவு சங்­கங்­க­ளுக்கு நுால், கூலி வழங்கி, சங்க உறுப்­பி­னர்­கள் மூலம் வேட்டி, சேலை உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது.இல­வச வேட்டி, சேலை தயா­ரிப்­புக்கு, அரசு டெண்­டர் மூலம், 1 கிலோ, 161 ரூபாய் என, நுால் விலை நிர்­ண­யித்­தி­ருந்­த­னர்.

தற்­போது நுால் விலை, வெளி மார்க்­கெட்­டில் உயர்ந்து, 180 முதல், 190 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. அரசு கொள்­மு­தல் செய்­யும் ரகம், 181 ரூபா­யாக உள்­ளது. இத­னால், செப்., மாத உற்­பத்­திக்கு, தமி­ழக அள­வில், 350 டன் நுாலுக்கு பதில், 125 டன் மட்­டுமே வரத்­தா­னது.

ஒதுக்கீடு :
இதில், ஈரோ­டுக்கு, 40 டன், திருச்­செங்­கோடு, 40 டன், கோவை, 10 டன், மீத­முள்ள நுால், விரு­து­ந­கர் மற்­றும் திரு­நெல்­வேலி மாவட்­டங்­க­ளுக்கு பிரித்து அனுப்­பப்­பட்­டுஉள்­ளது.

இது பற்றி, கைத்­தறி மற்­றும் துணி நுால் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: அரசு சார்­பில், ஈரோடு மாவட்­டத்­துக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட துணி­களை உற்­பத்தி செய்து வழங்க, சொசைட்­டி­கள் பணி­களை செய்து வரு­கின்றன. அந்­தந்த மாத ஒதுக்­கீட்­டின்­படி, நுால் பெறப்­பட்டு, நெச­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும். நடப்பு மாதத்­துக்கு, நுால் வரத்து குறைந்­துள்­ளது.

கூடுதல் தொகை :
நுால் விலை உயர்வு குறித்து, கைத்­தறி துறை சார்­பில் அர­சி­டம் தெரி­வித்து, கூடு­தல் தொகையை பெற முய­லும். நடப்பு மாதம் நுால் குறை­வாக வந்­துள்­ள­தால், சற்று தொய்வு ஏற்­பட்­டு உள்­ளது. ஆனால், வரும் மாதங்­களில் கூடு­தல் நுால் வழங்கி, இப்­ப­ணியை விரை­வு­ப­டுத்த, துறை ரீதி­யாக வலி­யு­றுத்­தப்­படும். பொங்­க­லுக்கு நாட்­கள் உள்­ள­தால், தேவை­யான முயற்சி மேற்­கொள்­ளப்­படும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)