பதிவு செய்த நாள்
21 செப்2018
23:43
புதுடில்லி : நேற்று காலை பங்கு வர்த்தகத்தில், யெஸ் பேங்க் பங்கின் விலை, ஓராண்டில் இல்லாத அளவிற்கு சரிந்ததால், வங்கியின் சந்தை மூலதனம், 14,452 கோடி ரூபாய் குறைந்து, பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
கடந்த, 2004ல், ராணா கபூர், அசோக் கபூர் ஆகியோரால், யெஸ் பேங்க் துவக்கப்பட்டது. தனியார் துறையில், குறுகிய காலத்தில், நான்காவது பெரிய வங்கியாக உருவெடுத்தது. இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, ராணா கபூர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ‘புதிய விதிமுறைகளின் படி, ராணா கபூர், 2019, ஜனவரியில் பதவி விலகி, புதியவரை நியமிக்க வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதையடுத்து, 2021 வரை பதவியில் நீட்டிக்க அனுமதிக்குமாறு, ராணா கபூர், ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தார். இதை நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இதன் தாக்கம், நேற்று, பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
யெஸ் பேங்க் பங்குகள் அதிகம் கைமாறியதால், அதன் விலை, ஓராண்டில் இல்லாத அளவிற்கு சரிந்து, சந்தை மூலதனம், 14,452 கோடி ரூபாய் வரை குறைய வழி வகுத்தது. வர்த்தகத்தின் இறுதியில், இப்பங்கின் விலை, முந்தைய வர்த்தக தினத்தை விட, 94.05 ரூபாய் குறைந்து, 225.15ல் நிலை பெற்றது.
விதிமீறல் :
உள்நாட்டு பணப் பரிவர்த்தனை விதிமீறல் தொடர்பாக, யெஸ் பேங்க், ஜி.எஸ்.டி., துறை க்கு, 38 கோடி ரூபாய் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|