பதிவு செய்த நாள்
23 செப்2018
03:11
சென்னை: ‘யமஹா மியூசிக் இந்தியா’ நிறுவனம், தமிழகத்தில், ‘கிடார், கீ போர்டு’ உள்ளிட்ட இசைக் கருவிகள் தயாரிப்பை, 2019ல் துவக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, சென்னை அருகே, திருப்போரூர் தாலுகாவைச் சேர்ந்த, குணப்பத்து கிராமத்தில், ‘ஒன் அப் சென்னை’ தொழிற்பேட்டையில் அமைத்துள்ளது. இது குறித்து, யமஹா மியூசிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தகாஷி ஹகா கூறியதாவது: நிறுவனம், 1,900 கோடி ரூபாய் முதலீட்டில், முதல் உற்பத்தி கூடத்தை அமைத்துள்ளது. இங்கு, அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும். முதல் ஆண்டில், 1 லட்சம் கருவிகள் தயாரிக்கப்படும். அதில், 20 – -30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும். இதே அளவு முதலீட்டில், இரண்டாம் கட்ட உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டதும், ஆண்டுக்கு, 4 லட்சம் கிடார்கள் மற்றும் 3 லட்சம் கீ போர்டுகள் தயாரிக்கப்படும். இந்தியாவில், தனியார் இசைப் பள்ளிகளுடன் இணைந்து, இசைப் பள்ளியை நிறுவியுள்ளோம். உள்நாட்டில், யமஹா இசைக் கருவிகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளதால், ஏற்றுமதி குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|