பதிவு செய்த நாள்
25 செப்2018
07:14
‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு, 4 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், 2019, ஜனவரி 23, 24ம் தேதிகளில், இரண்டாவது சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆனால், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பான பணிகளில் ஈடுபட, சம்பந்தப்பட்ட துறைக்கு, உரிய நிதி ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து, 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 10 ஆயிரத்து, 532 ஒப்பந்தங்கள் பெற்று தந்தனர்.இரண்டாவது மாநாட்டில், சிறு, குறு, நடுத்த நிறுவனங்கள், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள, மாநாட்டு நிதியில், எம்.எஸ்.எம்.இ.,க்கு, 4 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், மாவட்டத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|