பதிவு செய்த நாள்
14 அக்2018
00:26
புதுடில்லி:ஸ்டேட்
பேங்க் ஆப் இந்தியா, ‘இன்டர்நெட் பேங்கிங்’ எனப்படும் வலைதளம்
வாயிலான வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மொபைல்
போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளது.
இதுவரை,
மொபைல் எண்ணை தராமல் இருப்போர், டிச., 1க்குள், தாங்கள் கணக்கு
வைத்துள்ள வங்கிக் கிளைக்கு சென்று, பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு
பதிவு செய்யாத வாடிக்கையாளர்களின், இன்டர்நெட் பேங்கிங் வசதி,
டிச., 1க்கு பின் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஏற்கனவே, மொபைல் போன் எண்ணை பதிவு செய்திருக்கும்பட்சத்தில், இந்த புதிய உத்தரவு பொருந்தாது.ரிசர்வ்
வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களின்
மொபைல் போன் எண்களை கட்டாயம் பெற வேண்டும். இது, எஸ்.எம்.எஸ்.,
தகவல்களை அனுப்ப உதவும்.அதுபோல, வாடிக்கையாளர்களின்
மின்னஞ்சல் முகவரியையும், வங்கிகள் பெறுகின்றன. மின்னணு வங்கிச்
சேவை தொடர்பான தகவல்களை அனுப்ப, மின்னஞ்சல் முகவரி
பெறப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|