பதிவு செய்த நாள்
20 அக்2018
00:48
புதுடில்லி: உள்ளூர் உற்பத்தியாளர்களின் நலனை காக்கும் வகையில், சீனாவில் இருந்து இறக்குமதியாகும், உருக்கு பொருட்கள் மீது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டி.ஜி.டி.ஆர்., எனப்படும், வர்த்தக தீர்வுகளுக்கான டைரக்டர் ஜெனரலிடம், ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் நிறுவனம், சன்பிளாக் அயர்ன் அண்டு ஸ்டீல் நிறுவனம், உஷா மார்டின் உள்ளிட்ட சில உருக்கு உற்பத்தி நிறுவனங்கள், சமீபத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டு உள்ளதாவது: அண்டை நாடான, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு கம்பிகள் உள்ளிட்ட உருக்கு பொருட்கள், இந்திய சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இறக்குமதிக்கு அதிக வரி விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, டி.ஜி.டி.ஆர்., நடத்திய விசாரணையில், சீனாவின் குறிப்பிட்ட சில வகை உருக்கு பொருட்கள், இந்தியாவில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவது தெரிய வந்தது.இந்நிலையில் நேற்று, உள்ளூர் வியாபாரிகளின் நலனை காக்கும் வகையில், குறிப்பிட்ட சீன உருக்கு பொருட்கள் மீது, கூடுதல் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.சீனாவின் உருக்கு கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மீது, டன்னுக்கு, 13 ஆயிரத்து, 505 ரூபாய் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|