பதிவு செய்த நாள்
23 அக்2018
23:57
வாஷிங்டன் : அமெரிக்க அரசு, ‘எச் – 1பி’ விசா விண்ணப்பத்திற்கு தேவையான, 20 ஆயிரம் சிறப்பு வல்லுனர் பணியிட சான்றிதழ்களை, டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு, வழங்கியுள்ளது.
கடந்த, செப்டம்பர் மாதத்துடன் உடன் முடிந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இவ்வகை சான்றிதழ்களை அதிகம் பெற்ற, ‘டாப் – 10’ நிறுவனங்களில், ஒரே இந்திய நிறுவனம், டி.சி.எஸ்., என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனைச் சேர்ந்த, எர்னஸ்ட் அண்ட் யங், 1.51 லட்சம் சான்றிதழ்களை பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளது. டெலாய்ட் கன்சல்டன்ட், காக்னிஸென்ட் ஆகிய நிறுவனங்கள் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டவர்களை தற்காலிக பணிக்கு அமர்த்திக் கொள்ள, ‘எச் – 1பி’ விசா வழங்கப்படுகிறது.
ஒரு நிறுவனம், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் முன், தனக்கு தேவையான தனித்துவமிக்க அன்னிய வல்லுனர்களின் பணியிடங்கள் குறித்து, அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதை, அமைச்சகம் பரிசீலித்து, தகுதியின் அடிப்படையில், சான்றிதழ் வழங்குகிறது. இந்த சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே, ‘எச் – 1பி’விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|