பதிவு செய்த நாள்
14 நவ2018
23:16
வாஷிங்டன்:‘‘இந்தியர்கள் பேச்சில் வல்லவர்கள்,’’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.அவர் வசிக்கும் வெள்ளை மாளிகையில், தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. அதில், டிரம்ப் குத்துவிளக்கேற்றி பேசியதாவது:
அமெரிக்கா, இந்தியாவுடன் மிக ஆழமான நல்லுறவை பேணி வருகிறது. பிரதமர் மோடியின் நட்பு கிடைத்தமைக்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போது, என் மகள் இவாங்காவும், மோடிக்கு நண்பராகி விட்டார். இந்தியா மற்றும் இந்தியர்கள் மீது, எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்த, கடுமையாக முயற்சித்து வருகிறோம்.
இந்தியர்கள், வர்த்தகத்தில் சிறந்து விளங்குகின்றனர்; வர்த்தகம் தொடர்பான பரஸ்பர பேச்சி லும் வல்லவர்களாக திகழ்கின்றனர்.அமெரிக்காவை பல வகையிலும் முன்னேற்றுவதில், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த கடின உழைப்பாளிகள் பாரம்பரியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அது, நம் நாட்டிற்கு கிடைத்த பெரும் பேறாகும். அவர்களையும் சேர்த்து, ஒரே அமெரிக்க குடும்பமாக நாம் உள்ளோம்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது, அமெரிக்கா – இந்தியா இடையே, மிக நெருக்கமான நட்பு நிலவுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|