பதிவு செய்த நாள்
04 டிச2018
03:57
சென்னை:‘இந்தியாவில், 30 ஆயிரம் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு, 85 முதல், 90 சதவீதம் ஆகும்’ என, மத்திய வணிகத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, ‘டுவிட்டர்’ பக்கத்தில் மத்திய வணிகத் துறை பதிவு செய்துள்ள விபரம்:இந்தியாவில், 1957ம் ஆண்டு, பிளாஸ்டிக் உற்பத்தி துவங்கப்பட்டது. தற்போது, இந்திய பிளாஸ்டிக் துறையில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், 85 – 90 சதவீதம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகும். ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்திய பிளாஸ்டிக், 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாடு முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்கள் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், நம் வாழ்க்கை முறைக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கக் கூடியதாகவும் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|