பதிவு செய்த நாள்
09 டிச2018
23:44
வீட்டுக்கடன் என்பது நீண்ட கால பொறுப்பு என்பதால், மாதத்தவணையை மட்டும் செலுத்திக்கொண்டிருக்காமல், கடனை அடைப்பதற்காக தெளிவான திட்டமிடலும் இருக்க வேண்டும்.
ஒரு சிலர், முடிந்த வரை சீக்கிரம் அந்த கடனை அடைத்துவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்புவதுண்டு. வங்கிகளும் இதற்கேற்ப கடனை அடைக்க பலவிதமான வழிகளை அளிக்கின்றன:
அதிகரிக்கும் தவணை
பெரும்பாலான வங்கிகள், கடன் பெறுபவர்களின் எதிர்கால வருமான வளர்ச்சிக்கு ஏற்ப, மாதத்தவணையை படிப்படியாக அதிகரிக்கும் வசதியை அளிக்கின்றன. இந்த முறையின் படி, சில ஆண்டுகள் கழித்து, வருங்கால வருமான உயர்வுக்கு ஏற்ப, தவணை அதிகரிக்கும். இளம்வயதில் கடன் பெறுபவர்களுக்கு இது ஏற்றது.
குறையும் தவணை
அதிகரிக்கும்
தவணை முறைக்கு நேர் எதிரான முறை இது. கடன் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில் தவணை
அதிகமாக இருக்கும். பின்னர் படிப்படியாக அது குறையும். அதிக தவணை,
அசலை அதிகமாக அடைப்பதை குறிக்கும் என்பதால் முடிந்த வரை விரைவாக அடைப்பது நல்லது. கடன் அடையும் முன் ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்றது.
வட்டி விடுமுறை காலம்
பல வங்கிகள், கடன் பெறுபவர்களுக்கு மாதத்தவணை செலுத்த தேவையில்லாத விடுமுறை
காலத்தையும் அளிக்கின்றன. இது, 36 மாதங்கள் வரை இருக்கலாம். ஆனால், இந்த காலத்திற்கு வட்டி உண்டு. இந்த காலத்தில் வட்டி மட்டும் செலுத்தவும் தீர்மானிக்கலாம்.
வீட்டுக்கடன் வங்கி கணக்கு
பல வங்கிகள் வாடிக்கையாளர் வங்கி கணக்குடன் இணைந்த வீட்டுக்கடனையும் அளிக்கின்றன. நிலுவையில் உள்ள தொகையில் இருந்து, மாதாந்திர சராசரி மீதி தொகையை கழித்து, வட்டி கணக்கிடப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் கணக்கில் பணம் போடலாம், எடுத்துக்கொள்ளலாம்.
முழு தொகை
கட்டப்பட்டு வரும் வீட்டிற்காக கடன் பெறும் போது, வீடு கட்டி முடியும் வரை, ஒவ்வொரு கட்டமாக கொடுக்கப்படும் கடன் அளவிற்கு ஏற்ப, வட்டி மட்டும் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மாறாக, கடன் பெறத்துவங்கியதுமே, முழு அசல் தொகை மற்றும் வட்டிக்கும் சேர்த்து, தவணை செலுத்த துவங்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|