பதிவு செய்த நாள்
18 டிச2018
06:59
புதுடில்லி, டிச. 18–பிரபல, ‘ஹெல்மெட்’ தயாரிப்பு நிறுவனமான, ‘ஸ்டட்ஸ் அக்சஸரிஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடமிருந்து பெற்று உள்ளது.ஹெல்மெட் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவைப்படும் இதர உப பொருட்களை தயாரித்து வழங்கும், ஸ்டட்ஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.பரிசீலனைக்கு பின், செபி தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது.ஸ்டட்ஸ் நிறுவனம், 98 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. மேலும், நிறுவனர்களான, மது பூஷன் குரானா, சித்தார்த்த பூஷன் குரானா உள்ளிட்ட பங்குதாரர்களின், 39.39 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றுக்கான ஹெல்மெட் மற்றும் இதர உப பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும், பரிதாபாத் ஆலையில் முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்’ மற்றும் ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|