பதிவு செய்த நாள்
18 டிச2018
23:17
புதுடில்லி : ‘டாடா பவர்’ நிறுவனம், 70 கோடி ரூபாய் முதலீட்டில், மின் வாகனங்களுக்கான, ‘சார்ஜ்’ ஏற்றும் மையங்களை அமைக்க இருக்கிறது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பிரவீர் சின்ஹா கூறியதாவது: தற்போது, மும்பை, டில்லி, ஐதராபாத் ஆகிய இடங்களில், மொத்தம், 21 மையங்களை நிறுவனம் அமைத்துள்ளது. இவை தவிர, 1,000 மையங்களை, டில்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் அமைக்க இருக்கிறோம்.மேலும், மஹாராஷ்டிராவில், 100 மையங்களை நிறுவ இருக்கிறோம். இதற்காக, அரசு எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் ஆகியவற்றுடன் கூட்டு வைக்க இருக்கிறோம்.
இந்த மூன்று நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களில், இந்த சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க இருக்கிறோம்.மேலும், மால்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் போன்றவற்றுடனும் கூட்டு வைக்க இருக்கிறோம்.இந்த கூட்டு முயற்சியின் பலனாக, இடத்திற்காக தனியே முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்படாது. எனவே, விரைவில் முதலீட்டை திரும்ப எடுத்துவிட முடியும்.
தற்சமயம் இந்தியாவில், மொத்தம், 61 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன; 500 மின்சார சார்ஜ் ஏற்றும் மையங்கள் உள்ளன.வரும், 2030ம் ஆண்டில், டில்லியில் மட்டும், மூன்று லட்சம் சார்ஜ் ஏற்றும் மையங்கள் தேவைப்படும் என, கணிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|