வர்த்தகம் » பொது
தவிக்கும் முதலீட்டாளர்களுக்கு வாரன் பபெட் சொன்ன கவிதை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2018
23:38
இந்தாண்டு இன்னும் சில நாட்களில் நிறைவுறப் போகிறது... இந்த ஆண்டில் உலகம் முழுக்க பங்குச் சந்தைகள், கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளும், இந்த அதிர்வலைகளை சந்தித்தன.கடந்த ஆண்டிலும் இதேபோன்றதொரு சூழலில் தவித்தனர் முதலீட்டாளர்கள். அவர்களுக்கு, முதலீட்டு ஆலோசகர், வாரன் பபெட், இந்தியாவில் பிறந்த ஒருவரின் கவிதையை மேற்கோள் காட்டி கடிதம் எழுதினார்.
19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ருட்யார்டு கிப்ளிங் என்பவரின் கவிதை தான் அது. இந்தியாவில் பிறந்த கிப்ளிங், எழுத்தாளர், நாவலாசிரியர், கவிஞர் என, பன்முகம் கொண்டவர். எல்லா காலத்துக்கும் பொருந்தும் அந்த கவிதை வரிகளில் சில இதோ...
உன்னைச் சேர்ந்த
அனைத்தும்
நம்பிக்கை
இழந்திருக்கும்போது,
உன்னால் தலை உயர்த்தி
நிற்க முடியுமென்றால்...
உன்னால் காத்திருக்க முடிந்து,
அந்தக் காத்திருப்புக்காக
சோர்ந்து போகாமல்
இருக்க முடியுமென்றால்...
உன்னால் யோசிக்க முடிந்து
யோசிப்பதே
உன் குறிக்கோளாக
இல்லாமல் இருந்தால்...
மற்றவர்கள் எல்லாம்
உன்னைச் சந்தேகிக்கும் போது,
உன்னை உன்னால்
நம்ப முடியுமென்றால்...
உலகம் உனதே,
அதில் உள்ள
அனைத்தும் உனதே.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!