பதிவு செய்த நாள்
09 ஜன2019
00:35
புதுடில்லி:கடந்த ஆண்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய எட்டு நகரங்களில், வீடுகள் விற்பனை, முந்தைய ஆண்டை விட, 6 சதவீதம் அதிகரித்திருப்பது, ஆய்வுவொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க் இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:ஏழு ஆண்டுகளுக்கு பின், 2018ல், குடியிருப்பு சந்தை மீண்டும் எழுச்சி காணத் துவங்கியுள்ளது.
மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டம், ஜி.எஸ்.டி., குறைப்பு, குறைந்த விலை வீடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு துறை அந்தஸ்து போன்றவற்றால், குடியிருப்புகள் விற்பனை அதிகரித்துள்ளது.சென்னை, பெங்களூரு, டில்லி – தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், ஆமதாபாத் ஆகிய, ஆறு நகரங்களில், வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
கோல்கட்டா, புனே நகரங்களில், விற்பனை வளர்ச்சி குறைந்துள்ளது.ஒட்டுமொத்தமாக, வீடுகள் விற்பனை, 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.ஆர்வம்இதனால், தேங்கியுள்ள வீடுகள் எண்ணிக்கை, 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 11 சதவீதம் குறைந்து, நான்கு லட்சத்து, 68 ஆயிரத்து, 372 ஆக சரிவடைந்துள்ளது. இது, 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 30 சதவீதம் குறைவாகும்.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, எட்டு நகரங்களிலும், புதிய வீடுகள் அறிமுகம், 76 சதவீதம் அதிகரித்து, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து, 207 ஆக உயர்ந்துள்ளது.தற்போது, கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதால், வீடு வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வட்டி விகிதம் நிலையாக உள்ளதும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதும், வீடுகள் விற்பனை உயர துணை புரியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.முதலிடம்கடந்த ஆண்டு, அதிக வீடுகள் விற்பனையில், பெங்களூரு, 27 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கோல்கட்டா, புனே நகரங்கள், விற்பனை வளர்ச்சியில் பின்னடைவை கண்டுள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|