இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32 ...  சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு ... ...
வர்த்தகம் » ஜவுளி
‘ரேமண்ட்’ குழுமத்திற்கு முழுக்கு தலைவர் கவுதம் சிங்கானியா முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2019
23:45

மும்பை:‘ரேமண்ட்’ குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, கவுதம் ஹரி சிங்கானியா தெரிவித்துள்ளார்.


ரேமண்ட் குழும நிறுவனங்கள், ஜவுளி, அழகு பொருட்கள், பொறியியல் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.இதன் நிறுவனர், விஜய்பத் சிங்கானியாவிற்கும், அவர் மகன் கவுதம் ஹரி சிங்கானியாவுக்கும், பல ஆண்டுகளாக தகராறு நீடிக்கிறது. சமீபத்தில், விஜய்பத் சிங்கானியாவின் அனைத்து பொறுப்புகளையும் பறித்து, அவரை கவுரவ தலைவராக நியமித்தார், கவுதம்.


இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கவுதம் அளித்த பேட்டி:நான் எவ்வளவு காலம், ரேமண்ட் தலைவராக இருப்பேன் எனத் தெரியாது. எனக்குள் ஒரு திட்டம் உள்ளது; அதை இப்போது வெளியிட மாட்டேன்.இந்தியாவில், எத்தனை குடும்ப நிறுவனங்களில், தலைவர் பதவியில் இருந்து, இளம் வயது நிறுவனர் வெளியேறியுள்ளார் என்று கூறுங்கள்? அங்கு தான் பிரச்னை உள்ளது.


நாளை நான் மரணமடைந்தாலும், ரேமண்ட் குழுமத்தை தொடர்ந்து இயக்க, பலர் உள்ளனர். என் குழந்தைகள் சிறியவர்கள்.என் மனைவி, பிள்ளைகள், ஊழியர்கள், பங்கு முதலீட்டாளர் கள், வங்கிகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


கவுதம் ஹரி சிங்கானியா, தன் தந்தையால் துவக்கப்பட்ட ரேமண்ட் குழுமத்தில் இருந்து, தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டு, தனிப்பட்ட முறையில், புதிய நிறுவனத்தை துவக்க உள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)