பதிவு செய்த நாள்
10 ஜன2019
23:45
மும்பை:‘ரேமண்ட்’ குழும நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, கவுதம் ஹரி சிங்கானியா தெரிவித்துள்ளார்.
ரேமண்ட் குழும நிறுவனங்கள், ஜவுளி, அழகு பொருட்கள், பொறியியல் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.இதன் நிறுவனர், விஜய்பத் சிங்கானியாவிற்கும், அவர் மகன் கவுதம் ஹரி சிங்கானியாவுக்கும், பல ஆண்டுகளாக தகராறு நீடிக்கிறது. சமீபத்தில், விஜய்பத் சிங்கானியாவின் அனைத்து பொறுப்புகளையும் பறித்து, அவரை கவுரவ தலைவராக நியமித்தார், கவுதம்.
இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கவுதம் அளித்த பேட்டி:நான் எவ்வளவு காலம், ரேமண்ட் தலைவராக இருப்பேன் எனத் தெரியாது. எனக்குள் ஒரு திட்டம் உள்ளது; அதை இப்போது வெளியிட மாட்டேன்.இந்தியாவில், எத்தனை குடும்ப நிறுவனங்களில், தலைவர் பதவியில் இருந்து, இளம் வயது நிறுவனர் வெளியேறியுள்ளார் என்று கூறுங்கள்? அங்கு தான் பிரச்னை உள்ளது.
நாளை நான் மரணமடைந்தாலும், ரேமண்ட் குழுமத்தை தொடர்ந்து இயக்க, பலர் உள்ளனர். என் குழந்தைகள் சிறியவர்கள்.என் மனைவி, பிள்ளைகள், ஊழியர்கள், பங்கு முதலீட்டாளர் கள், வங்கிகள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.
கவுதம் ஹரி சிங்கானியா, தன் தந்தையால் துவக்கப்பட்ட ரேமண்ட் குழுமத்தில் இருந்து, தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டு, தனிப்பட்ட முறையில், புதிய நிறுவனத்தை துவக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|