பதிவு செய்த நாள்
29 ஜன2019
23:13
புதுடில்லி : தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இது குறித்து, இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது: அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக பதற்றம் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். அதனால், தங்கத்தில் முதலீடு அதிகரித்து, விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம், 1,305 டாலரை எட்டியுள்ளது. உள்நாட்டில், நேற்று, 10கிராம் சுத்த தங்கம் விலை, 100 ரூபாய் அதிகரித்து, 33ஆயிரத்து750 ரூபாயாக உயர்ந்தது. தொழிற்சாலைகளும், நாணயம் தயாரிக்கும் நிறுவனங்களும் மீண்டும் அதிக அளவில் வெள்ளியை வாங்கி வருகின்றனர். இதனால், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.
நேற்று, ஒரு கிலோ வெள்ளி விலை, 100 ரூபாய் அதிகரித்து, 41ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. டில்லியில், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை, 25 ஆயிரத்து 700 ரூபாயாக உயர்ந்துள்ளது. திருமண காலம் என்பதால், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில், ஒரு சவரன் ஆபரண தங்கம், 25ஆயிரத்து160 ரூபாய்; ஒரு கிலோ வெள்ளி,43ஆயிரத்து, 600 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|