பதிவு செய்த நாள்
01 பிப்2019
15:15
மும்பை : மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புக்கள் மற்றும் வரிசலுகைகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கியதும் பங்குச்சந்தைகள் படிப்படியாக உயர்ந்தது. பட்ஜெட் உரை நிறைவடைந்த போது சென்செக்ஸ் 518.62 புள்ளிகள் உயர்ந்து 36,775.31 என்ற நிலையை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 151.85 புள்ளிகள் உயர்ந்து 10,982.80 புள்ளிகளாக இருந்தன. சென்செக்ஸ் பொறுத்தவரை எச்டிஎப்சி, எச்டிஎப்சி வங்கி, மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிரடியாக உயர்ந்தன.
2030 ம் ஆண்டிற்குள் உலக அளவில் எலக்ட்ரானிக் வாகனங்கள் மற்றும் மின்சார சேமிப்பு சாதனங்கள் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்ற அறிவிப்பு காரணமாக ஆட்டோ துறை பங்குகள் வெகுவாக அதிகரித்தன. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்ட அறிவிப்பு, பங்குச்சந்தைகளின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ரூ.6.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பால் தனிநபர் முதலீடும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|