பதிவு செய்த நாள்
04 பிப்2019
23:45
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., புதிய பங்குகளை வெளியிடுவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.எம்.எஸ்.டி.சி., நிறுவனம், உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், மின்னணு வலைதள வர்த்தகம் சம்பந்தமான சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும், மின்னணு மூலமான ஏலம், விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 89.85 சதவீத பங்குகளை வைத்துள்ளது.தற்போது, பங்கு விலக்கல் முடிவின் கீழ், தன் வசமுள்ள பங்குகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, எம்.எஸ்.டி.சி., நிறுவனம், 1 கோடியே, 76 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.இதனால் அரசின் பங்கு, 64.85 சதவீதமாக குறைந்துவிடும். இந்த பங்கு வெளியீட்டின்போது குறிப்பிட்ட சதவீத பங்குகளை, அதன் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்ய இருக்கிறது.
கடந்த ஆண்டு, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 2017 - 18ம் ஆண்டிற்கான வரி செலுத்தியது போக, இந்நிறுவனத்தின் லாபம், 72.09 கோடி ரூபாயாக உள்ளது. இதன் நிகர மதிப்பு, 560.28 கோடி ரூபாயாக இருக்கிறது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, 'ஈக்யுரஸ் கேப்பிட்டல்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|