10 லட்சம் மூட்டை மஞ்சள் தேக்கம்10 லட்சம் மூட்டை மஞ்சள் தேக்கம் ... அன்னிய நேரடி முதலீடு வரவு 6 மாதங்­களில் 11 சதவீதம் குறைந்தது அன்னிய நேரடி முதலீடு வரவு 6 மாதங்­களில் 11 சதவீதம் குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் எம்.எஸ்.டி.சி., அரசின் 25 சதவீத பங்குகள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
23:45

புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, எம்.எஸ்.டி.சி., புதிய பங்குகளை வெளியிடுவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.எம்.எஸ்.டி.சி., நிறுவனம், உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், மின்னணு வலைதள வர்த்தகம் சம்பந்தமான சேவைகளை வழங்கி வருகிறது.

மேலும், மின்னணு மூலமான ஏலம், விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 89.85 சதவீத பங்குகளை வைத்துள்ளது.தற்போது, பங்கு விலக்கல் முடிவின் கீழ், தன் வசமுள்ள பங்குகளின் எண்ணிக்கையில், 25 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, எம்.எஸ்.டி.சி., நிறுவனம், 1 கோடியே, 76 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.இதனால் அரசின் பங்கு, 64.85 சதவீதமாக குறைந்துவிடும். இந்த பங்கு வெளியீட்டின்போது குறிப்பிட்ட சதவீத பங்குகளை, அதன் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விற்பனை செய்ய இருக்கிறது.
கடந்த ஆண்டு, மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 2017 - 18ம் ஆண்டிற்கான வரி செலுத்தியது போக, இந்நிறுவனத்தின் லாபம், 72.09 கோடி ரூபாயாக உள்ளது. இதன் நிகர மதிப்பு, 560.28 கோடி ரூபாயாக இருக்கிறது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, 'ஈக்யுரஸ் கேப்பிட்டல்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)