பதிவு செய்த நாள்
07 பிப்2019
23:55
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமான, ஐ.ஆர்.இ.டி.ஏ., புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர், குல்ஜித் சிங் பொப்லி கூறியதாவது:நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க, மத்திய அமைச்சரவைக் குழு, 2017ல் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க திட்டமிட்டுள்ளோம்.
மத்திய அரசு, 13.90 கோடி பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 750 – 923 கோடி ரூபாய் திரட்டப்படும்.இத்தொகை, மரபு சாரா எரிசக்தி திட்டங்களின் நிதியுதவிக்கு பயன்படுத்தப்படும்.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், நிறுவனம், 9,500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அடுத்த நிதியாண்டில், 30 சதவீதம் அதிகரிக்கும்.மரபு சாரா எரிசக்தி திட்டங்களுக்கு, 2020 மார்ச் வரை, 4,000 கோடி ரூபாய் கடன் வழங்க, ஒப்புதல் பெறப்பட்டுஉள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|