பதிவு செய்த நாள்
15 பிப்2019
23:42
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின், முதல், 10 மாதங்களில், தனிப்பட்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, 4.57 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன.
நிறுவனங்கள், அவற்றின் வர்த்தக விரிவாக்கம், நடைமுறை மூலதனம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, தனிப்பட்ட கடன் பத்திரங்களை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்கின்றன.வங்கி, மியூச்சுவல் பண்டு, காப்பீடு உள்ளிட்ட, குறிப்பிட்ட துறைகளுக்காக, இவ்வகை கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த வகையில், நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்ரல் – ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், பல நிறுவனங்கள், 1,955 கடன் பத்திர வெளியீடுகள் மூலம், 4 லட்சத்து, 87 ஆயிரத்து, 764 கோடி ரூபாய் திரட்டி உள்ளன. இந்த வெளியீடு, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 2,200 ஆக இருந்தது.கடந்த முழு நிதியாண்டில், நிறுவனங்கள், தனிப்பட்ட கடன் பத்திர வெளியீடுகள் மூலம், 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டின.
மேலும் அதிகரிக்கும்
வழக்கம் போல, நடப்பு நிதியாண்டிலும், கடன் பத்திர வெளியீடுகளில், நிதி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் வெளியீட்டின் மூலம், நிறுவனங்கள் அவற்றின் நிதியாதாரத்தை பெருக்கிக் கொள்கின்றன.
வரும், ஏப்., 1 முதல், ஒரு நிதியாண்டில், ஒரு நிறுவனம் திரட்டும் நீண்ட கால கடனில், குறைந்தது, 25 சதவீதம், கடன் பத்திர வெளியீடுகள் மூலம் பெற வேண்டும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.அதனால், வரும் நிதியாண்டில், நிறுவனங்களின் தனிப்பட்ட கடன் பத்திர வெளியீடும், திரட்டும் நிதியும் மேலும் அதிகரிக்கும்.முகுந்த் ரங்கநாதன், செயல் இயக்குனர் மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|