பதிவு செய்த நாள்
20 பிப்2019
07:24
புதுடில்லி : டில்லியில் இன்று நடைபெறும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், சிமென்ட், கட்டுமான வீடு ஆகியவற்றுக்கு, ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என, தெரிகிறது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:குஜராத், துணை முதல்வர், நிதின் படேல் தலைமையிலான குழு, மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்திற்கு வலுவூட்டும் விதத்தில், குறைந்த விலை வீடுகளுக்கான வரியை, 8 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அந்த அறிக்கை குறித்து, இன்றைய, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படும்.
மேலும், குறைந்த விலை வீட்டிற்கான, நிலப்பரப்பை, தற்போதைய, 540 ச.அடியில் இருந்து, 860 ச.அடியாக உயர்த்தி நிர்ணயம் செய்வது குறித்தும் தீர்மானிக்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம், இவ்வரம்பில், மேலும் அதிகமானோர் இணைந்து பயன் பெறுவர்.லாட்டரி சீட்டுதற்போது, கட்டுமானம் முடிந்த சான்றிதழுடன் விற்பனை செய்யும் வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., கிடையாது.
கட்டுமான நிலையில், பணி முடிப்பு சான்றிதழ் இன்றி விற்கப்படும், ‘பிரீமியம்’ வீடுகளுக்கு, 12 சதவீதம்; குறைந்த விலை வீடுகளுக்கு, 8 சதவீதம் வரி விதிப்பு உள்ளது.கட்டுமானம் நடைபெற்று வரும் குடியிருப்பிற்கான வரியை, 12லிருந்து, 5 சதவீதமாக குறைத்து, உள்ளீட்டு வரிப் பயனை நீக்குவது குறித்தும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.இத்துடன், வீட்டு வசதி துறையை ஊக்குவிக்க, சிமென்டிற்கான, 28 சதவீத, ஜி.எஸ்.டி., 18 சதவீதமாக குறைப்படும் என, தெரிகிறது.
வரி குறைப்பு அமலானால், கட்டுமான நிறுவனங்களும், வீடு வாங்குவோரும் பயனடைவர்.தற்போது, மாநில அரசு நடத்தும் லாட்டரி சீட்டிற்கு, 12 சதவீதம்; மாநில அரசின் அங்கீகாரத்துடன் நடத்தப்படும் லாட்டரி சீட்டிற்கு, 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதை, ஒரே சீராக நிர்ணயிக்க வேண்டும் என, வேறு ஓர் உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது.இது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|