பதிவு செய்த நாள்
25 பிப்2019
23:16
புதுடில்லி : போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அதன் முன்னாள் நிறுவனர்களான, மல்விந்தர் மோகன் சிங், ஷிவிந்தர் மோகன் சிங் சகோதரர்களை, நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்ய வேண்டும் என, ‘செபி’யிடம் வலியுறுத்தியுள்ளது.
சிங் சகோதரர்கள், போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முந்தைய இயக்குனர் குழுவின் உதவியுடன், மூன்று நிறுவனங்களுக்கு முறைகேடாக, 472 கோடி ரூபாய் திருப்பியதாக கூறப்படுகிறது. இதையொட்டி, சிங் சகோதரர்கள் மீது, கைது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறு, போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய இயக்குனர் குழு, செபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டை ஷிவிந்தர் மோகன் சிங் மறுத்துள்ளார். தன்னிடம் விளக்கம் கேட்காமல், அவகாசம் அளிக்காமல், கைது நடவடிக்கைக்கு முயற்சிப்பது முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|