மின்னணு பண பரிவர்த்தனை புதிய சேவையில் ரயில்வே மின்னணு பண பரிவர்த்தனை புதிய சேவையில் ரயில்வே ...  சீர்திருத்தங்களை செயல்படுத்தியதில் பஞ்சாப் நேஷனல் பேங்க் முதலிடம் சீர்திருத்தங்களை செயல்படுத்தியதில் பஞ்சாப் நேஷனல் பேங்க் முதலிடம் ...
ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் இந்தியா; வேலைவாய்ப்பு பெருக, உலக வங்கி யோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2019
07:19

புதுடில்லி : ‘இந்தியா, ஏற்றுமதியை அதிகரித்தால், வேலைவாய்ப்பு பெருகுவதோடு, ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும்’ என, உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய வர்த்தகத்தில், ஏற்றுமதி முதல், வேலைவாய்ப்பு வரை கிடைக்கும் பயன்கள் குறித்த ஆய்வறிக்கையை, உலக வங்கியும், சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளன.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:தெற்காசிய நாடுகள், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். ஏற்றுமதி உயர்ந்தால், உள்நாட்டில் வேலைவாய்ப்பு உயரும். ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும் என்பதால், ஒட்டுமொத்த நாடும் பயன்பெறும்.

அதேசமயம், மக்கள், புதிய வேலைவாய்ப்புகளை நாடி பயன்பெறுவதை தடுக்கும் காரணிகளையும் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.வறுமைகடந்த, 2017ல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சி கண்டிருந்தது. அதேசமயம், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துஉள்ளது.

எனினும், இந்தியாவில், பெரும்பாலானோருக்கு, அமைப்பு சார்ந்த துறைகளில் தொடர்ந்து வேலை கிடைப்பதில்லை. அதுபோல, ஊதிய விகிதமும், பிராந்திய அளவில் ஒரே சீராக இல்லை. தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலும் நிலவுகிறது.பெருகி வரும் மக்கள் தொகை பிரச்னையும் ஒரு காரணம். இத்துடன், 2012-– 17 வரை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வர்த்தகத்தின் பங்கு, 58.8 சதவீதத்தில் இருந்து, 41.1 சதவீதமாக குறைந்து உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியில், ரசாயனங்கள், உலோக வடிவமைப்புகள் போன்ற, மூலதனப் பொருட்கள் சார்ந்தவை தான், பிரதானமாக உள்ளன. அதனால், தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நேரடி பயன்களும் குறைவாகவே உள்ளன.அதனால், இந்தியா உரிய கொள்கைகளை வகுத்து, ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம், வர்த்தகத்தை பெருக்கலாம். இதனால், தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகமும் பயன்பெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)