பதிவு செய்த நாள்
06 மார்2019
23:36
புதுடில்லி:மத்திய அரசு, நாடு முழுவதும், மேலும், 2,500 மலிவு விலை மருந்து கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய ரசாயன துறை இணை அமைச்சர், மனுசுக் மான்டவியா கூறியதாவது: மக்கள், நோய் சிகிச்சையில், மருந்துகளுக்கு, 70 சதவீதம் செலவிடுகின்றனர். இதை பெருமளவு குறைக்கும் நோக்கில், பி.எம்.பி.ஜே.கே., என்ற, பிரதமரின் மலிவு விலை மருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 5,000 மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.
இங்கு, குறைந்த விலையில், 800க்கு மேற்பட்ட, 'ஜெனரிக்' எனப்படும் மூலக்கூறு மருந்துகள் மற்றும் 154 மருத்துவ சிகிச்சை பயன்பாட்டு பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம், தினமும், 10 - -15 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
2020க்குள், மேலும், 2,500 மலிவு விலை மருந்து கடைகளை திறக்க, திட்டமிட்டுள்ளோம்.இந்த மருந்துகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும், மார்ச் 7ல், 'மக்கள் மருந்து நாள்' ஆக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|