வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 மார்2019
12:40
மும்பை : வார இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 08) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மார்ச் 08) சென்செக்ஸ் 64.70 புள்ளிகள் சரிந்து 36,660.72 புள்ளிகளாகவும், நிப்டி 19.90 புள்ளிகள் சரிந்து 11,038.30 புள்ளிகளாகவும் இருந்தன. டாடா மோட்டார்ஸ், எச்சிஎல் டெக், வேதாந்தா, இன்போசிஸ், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.30 சதவீதம் சரிவுடன் காணப்படுகின்றன.
அதே சமயம் என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டிசிஎஸ், எச்யுஎல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.64 சதவீதம் உயர்வுடனும் காணப்படுகின்றன. ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 19 நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க அளவை குறைந்துள்ளதால் அமெரிக்க டாலருக்கு எதிரான ஐரோப்பிய கரன்சியின் மதிப்பு சரிந்துள்ளது. இதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியதால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 08,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 08,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 08,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 08,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!