பதிவு செய்த நாள்
12 மார்2019
17:54
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிக உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. ஆளும், பா.ஜ., அரசு, வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இந்த நம்பிக்கையில், நேற்று, பங்குகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்செக்ஸ் 6 மாதங்களுக்கு பிறகு 37 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
தொடர்ந்து இன்றைய வர்த்தகமும் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300க்கும் அதிகமான புள்ளிகளுடனும், நிப்டி 80க்கும் அதிகமான புள்ளிகளுடனும் வர்த்தகத்தை துவங்கின. மேலும் உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதாலும், ரூபாயின் மதிப்பு ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் மேலும் ஏற்றம் கண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 481.56 புள்ளிகள் உயர்ந்து 37,535.66ஆகவும், நிப்டி 133.15 புள்ளிகள் உயர்ந்து 11,301.20ஆகவும் நிறைவடைந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|