பதிவு செய்த நாள்
13 மார்2019
23:29
நாமக்கல்:‘ஈஸ்டர்’ விரதம் துவங்கியதை அடுத்து, தமிழகம், கேரளாவில் முட்டை நுகர்வு சரிந்துள்ளதால், அதன் கொள்முதல் விலை, 10 நாட்களில், 80 காசுகள் சரிந்துள்ளன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு,‘நெக்’ நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர் களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த முட்டை கொள்முதல் விலையானது, தட்ப வெப்பநிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
பிப், 1ல், 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, படிப்படியாக சரிந்து, 10 நாட்களில், 80 காசுகள் சரிந்துள்ளன. இது, மேலும் குறைய வாய்ப்பு உள்ளதால், பண்ணையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
தற்போது, ஈஸ்டர் விரதம் கடைப்பிடிப்பதால், நுகர்வு சரிந்துள்ளது. மேலும், வரலாறு காணாத தீவனம் விலை உயர்வு காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறையாலும், உற்பத்தி குறைந்துள்ளது.அதனால், முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நெக் நிர்ணயிக்கும் விலையில் இருந்து, 25 காசுகள் குறைத்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், 40 காசுகள் வரை குறைத்து, வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.தவிர, உற்பத்தி செலவு, ஒரு முட்டைக்கு, 430 காசுகளாகிறது. தற்போது, 330 காசுகள் தான் கிடைக்கிறது. இதனால், தினமும், 3.50 கோடி ரூபாய் அளவுக்கு பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|