பதிவு செய்த நாள்
03 ஏப்2019
23:11
சென்னை:'ஓரியண்ட் எலக்ட்ரிக்' நிறுவனம், அண்மையில், 'ஸ்மார்ட் ஏர்கூலரை' அறிமுகம் செய்தது. தற்போது, இதற்கு அதிகளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் விளம்பர துாதர், எம்.எஸ்.தோனி உடன், பிராண்டு பிரசாரம் ஒன்றை இந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது.இது குறித்து, ஓரியண்ட் எலக்ட்ரிக் வீட்டு உபகரணங்கள் பிரிவின் முதுநிலை துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவரான, சவுரப் பாஷ்ஷகியா கூறியதாவது:
தமிழகம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும். மேலும், இங்கு தோனிக்கு ரசிகர்கள் மிக அதிக அளவில் இருக்கின்றனர். எனவே, அவருடனான ஒரு பிராண்டு பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.'அலெக்ஸா' மென்பொருள் உதவியுடன், குரல் வழி உத்தரவை ஸ்மார்ட் கூலர்களுக்கு இட முடியும். ஏர்கூலர்கள் கொசுக்களின் கூடாரமாக மாறுவதாக நுகர்வோர் கவலை கொள்வதால், எங்கள் கூலர்களை கொசு இனப்பெருக்க எதிர்ப்பு அம்சத்தை கொண்டதாக அமைத்துள்ளோம்.
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், எங்கள் சந்தையை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில், இந்திய ஏர்கூலர் பிரிவில், 20 முதல், 25 சதவீத சந்தை பங்களிப்பை எதிர்நோக்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|