பதிவு செய்த நாள்
13 ஏப்2019
00:35
சென்னை:இந்தியாவில் வர்த்தக கடன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது; 2018ம் ஆண்டு டிசம்பர் வரை, 14.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:‘டிரான்ஸ் யூனியன் சிபில் – சிட்பி எம்.எஸ்.எம்.இ., பல்ஸ்’ காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் வழியாக, வர்த்தக கடன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவது, தெரிய வந்துள்ளது.கடந்த, 2018 டிச., காலாண்டில், வர்த்தக கடன், 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியாவில், 111.1 லட்சம் கோடி ரூபாய், மொத்த கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 25.2 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளில், எம்.எஸ்.எம்.இ., கடன்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. மொத்த நிலுவை கடன், ஆண்டுக்கு, 19.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வாராக் கடன் விகிகம் குறைந்து வருகிறது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான கடன் தேவை அதிகரித்துள்ளது. 10.1 லட்சம் பேர், இந்த பிரிவின் கீழ் புதிதாக கடன் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|