பதிவு செய்த நாள்
17 ஏப்2019
07:10
புதுடில்லி: ‘ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடமிருந்து பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வரும், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது.விண்ணப்பத்தை பரிசீலனை செய்த செபி, தற்போது அனுமதி வழங்கி இருக்கிறது. 250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்களின், 4 கோடியே, 24 லட்சத்து, 3,271 பங்குகளையும் வெளியிட்டு, 1,250 கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பங்கு வெளியீட்டை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், எடெல்வைஸ் பைனான்ஷியல் அட்வைஸரி அண்டு செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|