பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
23:41
மும்பை:நாட்டின் ஜவுளித் துறை, 2025ம் ஆண்டில், 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாக உருவெடுக்கும் முயற்சியில், அனைவரும் இறங்க வேண்டும் என, மத்திய ஜவுளித் துறை செயலர், அஜித் பி சவான் கேட்டுக் கொண்டார்.
மும்பையில் நடைபெற்ற, தேசிய ஜவுளி மாநாட்டில் பங்கேற்று, அவர் பேசியதாவது:இந்திய ஜவுளித் துறையை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான திட்டங்கள் நமக்கு தேவை. இதுவரை, நாம் அதிக அளவில் உற்பத்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். இனி, தரம் மற்றும் இதர விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி, போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்திய ஜவுளித் துறையின் மதிப்பு தற்போது, 9.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது, 2025ம் ஆண்டில், 25 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக மாற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கிராஸிம் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர், திலீப் கவுர் கூறியதாவது:சீனா – அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் வர்த்தக போரை பார்க்கும் போது, நாம் நமக்கான சந்தையை உருவாக்கிக் கொள்ள முனைப்பு கொள்ள வேண்டும். அதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியாளர்களை காக்க வேண்டும்.
வர்த்தகப் போர் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும். எனவே, ஸ்மார்ட் தொழிற் சாலைகளை நிறுவுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில், மலிவான ஜவுளிப் பொருட்களை, சீனா குவிப்பதை தடுக்க தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.மேலும், கைகளால் உருவாக்கப்படும் இழைகளை பயன்படுத்த முன்வர வேண்டும். இதன் மூலம், உலக சந்தையில், நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|