பதிவு செய்த நாள்
09 ஜூன்2019
03:01
புதுடில்லி:வாராக் கடன் குறித்த, ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை, வரவேற்கத்தக்க ஒன்றாகும் என, இந்திய வங்கிகள்சங்கம் தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி, கடந்த வெள்ளியன்று, வாராக் கடன் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டது. ‘இந்தப் புதிய அறிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாகும். மேலும், இது, வங்கி களுக்கு அதிகச் சுதந்திரம்வழங்கும் வகையில் உள்ளது’ என, இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவர், சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.விதிமுறைகள்கடந்த, 2018, பிப்ரவரி,12ல், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், வாராக் கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.
அதில், ஒரு நிறுவனம், கடன் தவணையைச் செலுத்த, ஒரு நாள் தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டுக் கடன் பிரிவில் சேர்த்து, 180 நாட்களுக்குள், கடனை மறுசீரமைக்க வேண்டும். தவறினால், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் மூலம், திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால், வங்கிகள் காலதாமதமின்றி, வாராக் கடனை கண்டறிந்து,வசூலிக்க முடியும். திவால் நடவடிக்கைக்கு அஞ்சி, நிறுவனங்களும் கடனை திரும்பச் செலுத்தும் என, ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது.
ஆனால், ரிசர்வ்வங்கியின் உத்தரவை, ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, பல நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.புதிய அறிவிப்புவிசாரணை முடிவில், ‘ரிசர்வ் வங்கி, 2018, பிப்., 12ல் பிறப்பித்த உத்தரவு, அரசியல் சாசனச் சட்டத்தில், தொழில் புரிவோருக்கு வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக உள்ளதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது, ரிசர்வ் வங்கி. இந்நிலையில், புதிய அறிவிப்பு, தற்போது வெளியாகி உள்ளது.அதில், இதற்குமுன், ஒரு நாள் என்று இருந்ததை, 30 நாட்களாகமாற்றுவது என்பது உள்ளிட்ட, பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தப் புதிய அறிவிப்பு, அனைவருக்கும் நல்ல தெளிவினை வழங்கி உள்ளது என, இந்திய வங்கிகள் சங்கத் தலைவர், சுனில் மேத்தா தெரிவித்து உள்ளார்.
அதிக அதிகாரம்இது குறித்து, நிறுவனங்கள் விவகாரத்துறை செயலர், இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:முனைப்பையும், தீவிரத்தையும் பொருத்தவரை, இந்தப் புதிய அறிவிப்பு, கிட்டத் தட்ட, பழைய அறிவிப்பை போன்ற ஒன்றுதான்.ஒரே ஒரு மாற்றம் என்ன வென்றால், இப்போது, வங்கிகளுக்கு அதிக அதிகாரம் கிடைத்துள்ளது என்பது தான்.ஒருவரை திவால் நடவடிக்கைக்கு ஆளாக்குவது அல்லது, சமாதானமாகப் போவது குறித்து, நிர்வாகக் குழு முடிவெடுக்கலாம்.
எனவே, இப்போது முடிவு எடுப்பது, வங்கிகள் வசம் வந்துள்ளது.இதற்கு முன்பு வந்த அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்றம் கூறும்போது, இது போன்ற பொதுவான அறிக்கை தர, ரிசர்வ் வங்கிக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்றது. இப்போது வழங்கப்பட்டிருக்கும் அறிக்கை மிகச் சிறந்த மாற்றான அறிக்கையாகும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|