பதிவு செய்த நாள்
12 ஜூன்2019
10:56
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 12) சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.33 புள்ளிகள் சரிந்து 37,921.13ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 11,920.65ஆகவும் வர்த்தமாகின.
அமெரிக்கா - சீனா இடையே நீடிக்கும் வர்த்தகப்போர், அதன்காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் ஐடி, வங்கி தொடர்பான பங்குகள் சரிந்து இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 10.45 மணியளவில் பங்குச்சந்தைகள் மேலும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிந்து 39,689ஆகவும், நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 11,890ஆகவும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.69.38ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|