பதிவு செய்த நாள்
28 ஆக2019
03:24
சென்னை : கடந்த, 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான, வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் இருக்கின்றன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் – 9’ உள்ளது. இதை, அனைத்து வணிகர்களும் தாக்கல் செய்வது அவசியம். 2017 – 18ம் நிதி ஆண்டுக்கான அவகாசம், வரும், 31ல் முடிவதாக இருந்தது; தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம் 9’ பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு கீழ், வரவு – செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம் – 9’ தாக்கல் செய்ய வேண்டும்.மொத்தம், 2 கோடி ரூபாய்க்கு மேல் வரவு – செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் – 9ஏ’ மற்றும் ‘9சி’ தாக்கல் செய்ய வேண்டும். 31ம் தேதி உடன், இதற்கான அவகாசம் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், இந்த அவகாசத்தை, நவம்பர் மாதம் வரை நீட்டித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|