பதிவு செய்த நாள்
09 செப்2019
00:26
மியூச்சுவல் பண்ட், தங்க இ.டி.எப்., உள்ளிட்ட தங்க நிதிகள், கடந்த சில மாதங்களில் மற்ற வகை நிதிகளை மிஞ்சும் வகையில் அதிக பலன் அளித்துள்ளன.
கடந்த மூன்று மாத காலத்தில் தங்க நிதிகள், 18.6 சதவீத பலனை அளித்திருப்பதாக ‘வேல்யூ ரிசர்ச்’ ஆய்வு தெரிவிக்கிறது. இது, சமபங்கு நிதிகள் அளித்த பலனை விட அதிகமாக இருக்கிறது.தங்கத்தின் மதிப்பு உயர்ந்து வருவது, தங்க நிதி முதலீட்டாளர்களுக்கு நல்ல பலன் தந்திருப்பதோடு, சமபங்கு அல்லது கடன் சார் நிதிகள் முதலீட்டில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டக் கூடியதாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.தங்க நிதிகள் ஒரு மாத காலத்தில், 10 சதவீத பலன் மற்றும் ஓராண்டு காலத்தில், 26 சதவீத பலன் அளித்துள்ளன. மற்ற வகை நிதிகள் எதிர்மறை பலனை அளித்துள்ளன.
சர்வதேச போக்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப் பட்டாலும், முதலீட்டு தொகுப்பின் பரவலாக்கம் கருதியே தங்க நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும் என, நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். இது, முதன்மை முதலீடாக இருக்கக் கூடாது என்கின்றனர்.தங்க நிதிகள் போலவே அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரத்திலும் முதலீடு செய்யலாம் என, வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|