பதிவு செய்த நாள்
10 செப்2019
23:57
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 4 சதவீதம் உயர்ந்து, 25.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இந்த உயர்வுக்கு, பங்குகள் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அதிகளவு வருவாய் இருந்தது காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், நாட்டில் உள்ள, 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 24.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில், 4 சதவீதம் அதிகரித்துள்ளது. மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம், 1.02 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை கண்டுள்ளது. இதுவே, ஜூலை மாதத்தில், 87 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதத்தில், பங்குகள் சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட, லிக்யுட் பண்டுகளில், அதிகள வில் முதலீடுகள் வந்ததும், சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்ததும் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தன என, பண்டு மேனேஜர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில், எஸ்.ஐ.பி., எனும் முறையான முதலீட்டு திட்டங்கள் மூலம் வருவாய், 8,231 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே, ஜூலை மாதத்தில் 8,324 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|