பதிவு செய்த நாள்
17 செப்2019
10:58
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 147, நிப்டி 43 புள்ளிகள் சரிந்த நிலையில் காலை 10.50 மணியளவில் மேலும் சரிந்து, சென்செக்ஸ் 269.78 புள்ளிகள் சரிந்து 36,853.53ஆகவும், நிப்டி 80.80 புள்ளிகள் சரிந்து 10,922.70ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்க - சீனா இடையே நடக்கு வர்த்தக போரை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதேப்போன்று அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கூட்டம் நடைபெறுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, வங்கி, எரிசக்தி மற்றும் ஐடி., தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து ரூ.71.88ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|