பதிவு செய்த நாள்
18 செப்2019
06:20
பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க, மத்திய நிதி அமைச்சகம், நிதி ஒதுக்க மறுப்பதாக, அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களும், அதிகாரிகளும் பணிபுரிகின்றனர்.இதன் மொத்த வருவாயில், 65 சதவீதம் நிதி, ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுவதாகவும், நிதி சுமை அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால், 50 வயதை தாண்டும் ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு வழங்கவும், ஓய்வூதிய வயதை, 58 ஆக குறைக்கவும், நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, ஆக., மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. விருப்ப ஓய்வு குறித்து, விரைவில் அறிவிப்பு வரும் என, தெரிவித்தனர். ஆனால், அது குறித்தும் ஏதும் தெரிவிக்கவில்லை. தற்போது, விருப்ப ஓய்வு திட்டத்திற்கான நிதியை ஒதுக்க, மத்திய நிதி அமைச்சகம் மறுப்பதாக கூறப்படுகிறது. சம்பளமாவது, விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|