பதிவு செய்த நாள்
22 செப்2019
10:00
கோல்கட்டா: நாட்டின் பொருளாதாரம், 350 லட்சம் கோடி ரூபாய் கொண்டதாக மாற வேண்டுமென்றால், வங்கிகளின் கடன், 12 சதவீதமாக வளர்ச்சி பெற வேண்டும் என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குனர், தினேஷ் குமார் காரா கூறியதாவது:அடுத்த ஐந்து ஆண்டு களில், 350 லட்சம் கோடி ரூபாய் கொண்ட பொருளாதாரமாக, இந்தியா வளர்ச்சி பெற வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்கை எட்ட வேண்டுமென்றால், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 12 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.இந்த இலக்கை அடைவதற்கு, வங்கிகளின் இணைப்பு நடவடிக்கை உதவிகரமாக இருக்கும்.தற்போது, வங்கிகளிடம் கடன் வழங்குவதற்கான தொகை, 98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு, தினேஷ் குமார் காரா கூறினார்.
எஸ்.பி.ஐ., வங்கியின், துணை நிர்வாக இயக்குனர், எஸ்.கே.வர்மா, வங்கிகளின் கடன் குறித்து கூறியதாவது:பெரு நிறுவனங்களின் கடன் தேவையானது, நடப்பு நிதியாண்டில், இதுவரை மிகவும் மந்தமாக இருக்கிறது.ஆனால், வரும் காலத்தில், நல்ல பருவ மழையுடன் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம். பணப்புழக்கத்தில் எந்தவொரு பற்றாக்குறையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|