பதிவு செய்த நாள்
10 அக்2019
23:56
புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருக்கும் என, குறைத்து கணித்துள்ளது, தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ்.
நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.2 சதவீதமாக இருக்கும் என்ற தனது கணிப்பை தற்போது குறைத்து, 5.8 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.
கடந்த வாரம், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வளர்ச்சி, 6.1 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், மூடிஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு அதை விட குறைவாக உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: அடுத்த நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக அதிகரிக்கும். நடுத்தர காலகட்டத்தில், 7 சதவீத மாக உயரும்.
அடுத்த இரண்டு ஆண்டு காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், பணவீக்கமும் அதிகரிக்கும்.முதலீடுகளில் ஏற்பட்ட மந்தநிலை, நுகர்வையும் பாதித்துள்ளது. கிராமப்புறங்களில் பணப்புழக்க குறைவு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் நுகர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி, மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது.இவ்வாறு, மூடிஸ் நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|