காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும் காலாண்டை கடந்து சிந்திக்க வேண்டும் ...  அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சி அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க முயற்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி இலக்குகளை அடைவதில் உறுதி தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
06:19

நிதி இலக்குகள் முக்கியமானவை. வளமான வாழ்க்கையை பெறுவதில், அவை முக்கிய வழிகாட்டியாக அமைகின்றன.

இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டால் மட்டும் போதாது. அவற்றை அடைவதில் உறுதி தேவை. நிதி இலக்குகளை நோக்கி முன்னேறும் பயணத்தில், வழக்கமாக ஏற்படக்கூடிய தடைகளை வெல்லும் வழிகள் இதோ:ஒப்பீடு வேண்டாம்: உங்களுக்கும், பணத்திற்குமான உறவு தனிப்பட்டது. அதை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். நிதி இலக்குகள், உங்கள் சூழல் மற்றும் தேவையை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும்.


நண்பர்கள் அல்லது உறவினர்களின் நிதி இலக்குகளுடன் உங்கள் இலக்குகள், முதலீடுகளை ஒப்பிட்டு பார்ப்பதால் எந்த பயனும் இல்லை.அவசரம் வேண்டாம்: முதலீடுகளை தேர்வு செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். பணம் தொடர்பான உங்கள் பார்வை, உங்கள் சூழல் மற்றும் வரம்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நிதி திட்டமிடலை வகுத்துக்கொள்ளுங்கள். நிதி திட்டமிடலுக்கு ஏற்ப உங்கள் முதலீடு தேர்வு அமைவது பொருத்தமாக இருக்கும்.


பொறுமை தேவை: நிதி இலக்குகளை அடைவது என்பது நீண்ட கால பயணம். இதில் உறுதியும், பொறுமையும் தேவை. இடையே முதலீடுகள் தரும் பலனை ஆய்வு செய்வது அவசியம் என்றாலும், சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அடிக்கடி மாற்றம் செய்வதையோ, புதிய முதலீடு பக்கம் தாவுவதையோ தவிர்க்கவும்.தவறான முதலீடு: சந்தையின் தாக்கம் அல்லது எந்த முதலீடு அதிக பலன் தரும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் எதிர்பாக்கும் பலன் என்ன மற்றும் உங்கள் இடர் தன்மை ஆகியவை அடிப்படையில் முதலீடுகளை தேர்வு செய்யுங்கள்.

தவறான முதலீடுகள் இழப்பை ஏற்படுத்தும்.முதலீடு ஒதுக்கீடு: ஒரே வகையான முதலீட்டில் பணத்தை போடுவதை விட தவறான உத்தி வேறு கிடையாது. எனவே, உங்கள் இலக்குகளை அடைய, பலவகையான முதலீடு வகைகளை நாடவும். சரியான ஆலோசனை பெற்று, உங்களுக்கு ஏற்ற முதலீட்டு தொகுப்பை பின்பற்றவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)