பதிவு செய்த நாள்
03 டிச2019
23:55
புதுடில்லி:‘சம்ஹி ஓட்டல்ஸ்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக் கான அனுமதி வேண்டி, கடந்த செப்டம்பர் மாதத்தில் விண்ணப்பம் செய்திருந்தது.
சம்ஹி ஓட்டல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 1,800 கோடியிலிருந்து, 2,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டில், 1,100 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர் வசம் உள்ள, 1.91 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, டி.எஸ்.பி., மெரில் லிஞ்ச் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.சம்ஹி ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு, 12 நகரங்களில், 27 ஓட்டல்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|