பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி குழுமத்தின் ஆய்வறிக்கை பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த ... ... தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது தாமத வரி தாக்கல் செய்ய கெடு முடிகிறது ...
பங்குச் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2019
23:49

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்­டி­யில், கடந்த வாரம், 280 புள்­ளி­கள் உயர்ந்து வர்த்­த­கம் முடி­வுற்­றது. ஆரம்ப நாட்­களில் சரிந்து வர்த்­த­கம் ஆன போதி­லும், புதன், வியா­ழன், வெள்ளி ஆகிய தினங்­களில் சந்தை உயர்ந்து வர்த்­த­கம் ஆனது.

சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்ட நிகழ்­வு­களின் தாக்­கம், நம் சந்­தை­யி­லும் பிர­தி­ப­லித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்­கும், சீனா­வுக்­கும் இடையே, கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக நடை­பெற்­று­வ­ரும் வர்த்­த­கப் போர் குறித்து, முதல்­கட்ட பேச்­சு­வார்த்தை சுமு­க­மாக நடை­பெற்­றுள்­ளது.
இதில் குறிப்­பி­டும்­ப­டி­யாக, அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து, விவ­சா­யப் பொருட்­களை, சீனா இறக்­கு­மதி செய்­வ­தற்­கான ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது.

இவ்­வா­றாக, இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே சுமு­கப் போக்கு நில­வும் என்ற எதிர்­பார்ப்­பில், சர்­வ­தேச சந்­தை­யில், அனைத்து பங்­குச் சந்­தை­களும் உயர்ந்து வர்த்­த­கம் ஆகின. அதன் தாக்­கம் நம் சந்­தை­யி­லும் பிர­தி­ப­லித்­தது.

மேலும், ஐரோப்­பிய நாடான, பிரிட்­ட­னில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில், பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தலை­மை­யி­லான, கன்­சர்­வேட்­டிவ் கட்சி வெற்றி பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து, ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிட்­டன் வெளி­யே­று­வது குறித்து நிலவி வந்த அர­சி­யல் சிக்­கல்­கள் தீர்க்­கப்­படும் என்ற எதிர்­பார்ப்பு வலு­வ­டைந்­துள்­ளது. இது, சர்­வ­தேச சந்­தை­யில் சாத­க­மான போக்­கிற்கு வழி­வ­குத்­தது.

கடந்த வாரம் வெளி­யான, நாட்­டின் பண­வீக்க விகி­தம் மற்­றும் தொழில்­துறை வளர்ச்சி குறி­யீ­டு­கள், எதிர்­பார்த்­த­தை­விட சரி­வ­டைந்த நிலை­யி­லேயே வெளி­வந்­தன. நவம்­பர் மாதத்­தின் நுகர்­வோர் பண­வீக்க விகி­தம், 5.5 சத­வீ­த­மாக இருந்­தது. மேலும், சில்­லரை பண­வீக்க விகி­தம், அக்­டோ­பர் மாதத்­தில், 4.62 சத­வீ­த­மா­க­வும், செப்­டம்­பர் மாதத்­தில், 3.99 சத­வீ­த­மாக இருந்­தது.

உணவு பண­வீக்க விகி­தம், அக்­டோ­பர் மாதத்­தில், 7.8 சத­வீ­த­மா­க­வும், முந்­தைய செப்­டம்­பர் மாதத்­தில், 5.1 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.ஐ.பி., எனும், இந்­திய தொழில்­துறை வளர்ச்சி குறி­யீடு, அக்­டோ­பர் மாதத்­தில், அதற்கு முந்­தைய மாதத்­தைக் காட்­டி­லும், 3.8 சத­வீ­தம் சரிந்­தி­ருந்­தது.

மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் சென்­செக்ஸ், 41 ஆயி­ரம் புள்­ளி­க­ளை­யும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, 12 ஆயி­ரம் புள்­ளி­க­ளை­யும் கடந்த நிலை­யில், பெரும்­பா­லான சிறு மற்­றும் நடுத்­தர பிரிவைச் சேர்ந்த பங்­கு­கள், எந்த ஒரு வளர்ச்­சி­யும் இல்­லா­மல் வர்த்­த­க­மாகி வரு­கின்றன.

மேலும், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலை­யில் உள்­ளது. இந்­நி­லை­யில், பொரு­ளா­தார வளர்ச்­சியை ஊக்­கு­விக்­கும் வித­மாக, ஆளும் மத்­திய அரசு, பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்து ஈடு­படும் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது. வளர்ச்­சியை ஊக்­கு­விக்க, பல்­வேறு பொரு­ளா­தார சலு­கை­களை மேலும் அறி­விக்க கூடும் என்று எதிர்­பார்ப்­பும், சந்­தை­யில் பங்­கு­கள் விலை உயர, வழி­வ­குத்­தது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 12135 மற்­றும் 12190; சப்­போர்ட், 11985 மற்றும் 11910.
முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)