பதிவு செய்த நாள்
17 ஜன2020
05:22
மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், முதல் முறையாக, வர்த்தகத்தின் இடையே, 42 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு, சாதனை படைத்தது.
அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, ஆரம்பகட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, அதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது.
இதன் காரணமாக, நேற்று வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் உயர்ந்து, முதன் முறையாக, 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. அதிகபட்ச அளவான, 42059.45 புள்ளிகளை அது தொட்டது. பின், வர்த்தக முடிவில் குறைந்து, 41932.56 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும், இதுவரை இல்லாத அளவுக்கு, வர்த்தகத்தின் இடையே, 12389.05 புள்ளிகளை தொட்டது. பின், வர்த்தகத்தின் முடிவில், 12355.50 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், ‘நெஸ்லே இந்தியா’ நிறுவன பங்குகள் விலை, 3.23 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து, கோட்டக் பேங்க், எச்.யு.எல்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., ஆகிய நிறுவன பங்குகளின் விலையும் அதிகரித்தன. மாறாக, என்.டி.பி.சி., ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, ஆக்சிஸ் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|