தங்கம் விலை சவரன் ரூ.552 சரிந்ததுதங்கம் விலை சவரன் ரூ.552 சரிந்தது ... ஜி.எஸ்.டி., பதிவு  யாருக்கு எப்போது எப்படி? ஜி.எஸ்.டி., பதிவு யாருக்கு எப்போது எப்படி? ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளித்துறை வளர்ச்சிக்கான 4 விஷயங்கள்: முன்னெடுக்கும் ஐ.டி.எப்.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2020
18:32

மத்திய அரசு புதிய ஜவுளிக்கொள்கையை அறிவிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜவுளித் தொழிலின் அனைத்து பிரிவுகளுடனும் தனித்தனியே ஆலோசனை நடத்தி, வரைவு ஜவுளிக் கொள்கையை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஜவுளி சார்ந்த அமைப்புகளும் அரசை மட்டும் எதிர்பார்க்காமல், தன்னகத்தே வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகளையும், திட்டங்களையும் வகுத்துவருகின்றன. இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு(ஐ.டி.எப்.,) வரும் நிதியாண்டில் நான்கு விஷயங்களை மையமாக கொண்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னெடுக்கிறது.ஐ.டி.எப்., - 'கிரிசில்' அமைப்பு நடத்திய நிதிநிலை ஆய்வில், நுாற்பாலைகள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இடையே லாப இடைவெளி அதிகரித்து செல்வது தெரியவந்துள்ளது.

எனவே, ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி கட்டமைப்பில் கவனம் செலுத்த தொழில் மற்றும் நிபுணர் ஆலோசனை குழு ஒன்றை உருவாக்கி தீர்வுகாண முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.நம் பகுதி ஜவுளி உற்பத்தியை பசுமை மற்றும் சுற்றுச்சூழல் உற்பத்தி மையமாக, 'பிராண்டிஸ்' செய்யும் முயற்சியாக, இளம் தலைமுறை தொழில்முனைவோர் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ, 30 முதல் 40 சதவீத நிறுவனங்கள் நடைமுறை மூலதனப் பிரச்னைகளை சந்திக்கின்றன.இதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படுவதுடன், ஜவுளி உற்பத்தி நிறுவன மேலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தலைமைப்பண்புக்கான பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)