பதிவு செய்த நாள்
13 மார்2020
23:49
மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, யு.பி.எஸ்., நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு கடன் வளர்ச்சி பலகீனமாக இருப்பது மற்றும் ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, வளர்ச்சி பாதிக்கப்படும்.நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சியையும், 4.8 சதவீதமாக குறைத்துள்ளோம்.
கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 5 சதவீதத்துக்கும் கீழே இருக்கும். அடுத்த நிதியாண்டில், 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.இதுவரை, கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நிச்சயமற்ற தன்மையும், அச்சமும் நுகர்வோர் நம்பிக்கையை குறைத்து, உள்நாட்டு தேவையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் எலக்ட்ரானிக்ஸ், மருந்து, வாகன துறைகளில், உள்ளீட்டு பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டிருக்கும் குறைபாடும், இத்துறை சார்ந்த உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு தேவைகளும் உலக நிலவரங்களால் குறைந்துள்ளன.கொரோனா வைரஸ் தாக்குதல் தவிர, உள்நாட்டு கடன் வளர்ச்சியும், அடுத்த இரண்டு காலாண்டுகளில், பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, 5.6 சதவீதத்திலிருந்து, 5.1 சதவீதமாகவும்; நடப்பு நிதியாண்டுகான வளர்ச்சி, 4.9 சதவீதத்திலிருந்து, 4.8 சதவீதமாகவும் குறைத்து கணிக்கப் பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|